Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருபப்து ஜனநாயகத்திற்கு எதிரானது: ஸ்டாலின்

ஜுன் 25, 2020 08:48

சென்னை: கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருபப்து ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்துள்ளது ஜனநாயகத்திற்கு எதிரானது. கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி, அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது ஜனநாயக விரோதம். 

மாநில உரிமைகள் மற்றும் விவசாயிகளின் கடன் பெறும் வசதிகளை பாதுகாக்க இந்த அவசர சட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவசர சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்