Wednesday, 29th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு, தலைவராக இருக்க தகுதி அற்றவர் ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.
இன்று காலை கோனியம்மன் கோவிலில் சென்று வழிபட்டு விட்டு அதன்பிறகு ராஜவீதி, செல்வபுரம் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் இருந்து தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
அப்போது அவர் ஊழலைப் பற்றி பேச தகுதி இல்லாதவர் திமுக தலைவர் ஸ்டாலின். விலைமதிப்பு மிக்க இடங்களை பார்த்தால் பட்டா போட்டுவிடுவார்கள் திமுகவினர் என்றும் மாவட்ட மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்றார்.
குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்துள்ளது அதிமுக அரசு என்றும், சட்டப்படி நடக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருபவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்றும், தான் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் என படிப்படியாக வந்து முதலமைச்சராக வந்துள்ளேன், ஆனால் ஸ்டாலின் அப்படி இல்லை அவருடைய தந்தையின் பெயரை பயன்படுத்தி கட்சியின் தலைவர் ஆகியுள்ளார் எனவும், மக்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்து முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறேன் என்றார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு, தலைவராக இருக்க தகுதி அற்றவர் ஸ்டாலின் எனவே மீண்டும் அதிமுக அரசு தொடர அனைத்து மக்களும் அதிமுக விற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பேசினார்.