Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை

ஜுன் 17, 2021 11:17

திருப்போரூர்: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனையிட்டனர். மேலும் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடமும் விசாரித்தனர். இதற்கிடையே பள்ளியில் இருந்து 4 மடிக்கணினிகள், 2 கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.

இந்த சூழ்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்