Monday, 10th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடர் மழையினால் குற்றால மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு

நவம்பர் 16, 2022 01:03

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் இன்று காலை மெயினருவி மட்டுமல்லாது பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி களிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அதே நேரத்தில் ஐந்தருவி மற்றும் புலியருவி உள்ளிட்டவற்றில் இன்று காலை தண்ணீரின் வேகம் சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்