Monday, 10th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்கப்பட்டது. குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பேரவை நிர்வாகிகளுக்கு முதல்வர், பேராசிரியர்கள் ரகுபதி, சரவணா தேவி, ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.