Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

ஏப்ரல் 14, 2020 02:31

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,173 இல் இருந்து 1,204 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1, 173 இல் இருந்து 1, 204ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை 19, 255 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள. 28, 711 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 135 பேர் அரசு முகாமிலும் உள்ளனர்.10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரே நாளில் திண்டுக்கல் 9, சென்னை 5, தஞ்சையில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 31 பேரில் 21 பேர் ஒரே மாநாட்டில் பங்கேற்றவர்கள். இன்று மட்டும் 6, 509 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்திருக்கின்றன. 

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்