Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏப்.,20 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம்: மத்திய அரசு

ஏப்ரல் 18, 2020 06:49

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், ஏப்., 20 முதல் இயங்கும் என மத்திய அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, மே 3ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்.,20 முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்க, டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் 25ல் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 20ம் தேதி (திங்கள்) முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்