Wednesday, 29th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளியூர் ஆட்கள் வராமல் இருக்க கிராமங்களில் சோதனைச்சாவடி

ஏப்ரல் 26, 2020 08:31

புதுக்கோட்டை: வெளியூர் ஆட்கள் வராமல் இருக்க கிராமங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இளைஞர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அந்த வாலிபரின் ஊரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் முழு கண்காணிப்பில் அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தகவல் வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் அந்தந்த கிராம இளைஞர்கள் முயற்சியில் முக்கிய சாலைகளை மூடி சோதனைச்சாவடிகள் அமைத்து வெளியூர் ஆட்களை கண்காணித்து அவர்களை கிருமி நாசினிகொண்டு கை கால்களை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வாகனங்களையும் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கின்றனர். அதாவது கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கொத்தமங்கலம் குளமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்