Wednesday, 29th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 24 ஆனது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 25 பெண்களும், 39 ஆண்களும் அடங்கும். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் 29056 பேரும், அரசு கண்காணிப்பில் 26 பேரும் உள்ளனர்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 60 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் விகிதம் 54.11 ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.27 ஆகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.