Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று

மே 10, 2020 03:15

சென்னை: சென்னையில் இன்று (மே 10) ஒரே நாளில் 509 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில், பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. இன்று தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட 669 பேரில், சென்னையில் மட்டும் 509 பேர் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் திருவள்ளூரில் 47 பேர், செங்கல்பட்டில் 43 பேர், திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்