Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா: ஒரே நாளில் 4,213 பேருக்கு தொற்று

மே 11, 2020 05:13

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 11) காலை 9.00 மணி நிலவரப்படி, 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2,206 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 4,213 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 62,939 லிருந்து 67,152 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 19,358 லிருந்து 20,917 ஆக அதிகரித்துள்ளது. 44,029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட துவங்கிய பின் தற்போது தான் முதன்முறையாக 4,213 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 22,171 - 832
குஜராத் - 8,194 - 493
தமிழகம் - 7,204 - 47
டில்லி - 6,923 - 73
ராஜஸ்தான் - 3,814 - 107
மத்திய பிரதேசம் - 3,614 - 215
உத்தர பிரதேசம் - 3,467 - 74
ஆந்திரா - 1,980 - 45
மேற்கு வங்கம் -1,939 - 185
பஞ்சாப் - 1,823 - 31
தெலுங்கானா - 1,196 - 30
காஷ்மீர் - 861 - 09
கர்நாடகா - 848 - 31
ஹரியானா - 703 - 10
பீஹார் - 696 - 06
கேரளா -512 04
ஒடிசா - 377- 03
சண்டிகர் - 169 - 2
ஜார்க்கண்ட் - 157 - 03
திரிபுரா- 150 - 0
உத்தரகாண்ட் - 68 - 1
அசாம் - 63 - 01
சத்தீஸ்கர் - 59 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 55 - 02
லடாக் - 42 - 0
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 10 - 0
கோவா- 07 - 0
மணிப்பூர் - 02 - 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

தலைப்புச்செய்திகள்