Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலேசியாவிலிருந்து 179 இந்தியர்கள் கொச்சி வந்தடைந்தனர்

மே 11, 2020 05:54

கொச்சி: ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும், 'வந்தே பாரத்' முயற்சியின் கீழ், பல நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் ,மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 2 குழந்தைகள் உள்பட 179 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று இரவு கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய பின்னர் தனிமை மையங்களில் வைக்கப்படுவர்.

தலைப்புச்செய்திகள்