Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இருந்து கேரளா சென்ற 2 பேருக்கு கொரோனா தொற்று

மே 11, 2020 07:41

திருவனந்தபுரம்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கேரளா சென்ற 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் கேரளாவின் வயநாடு பகுதியில் இருந்து 2 வியாபாரிகள் சென்றனர். 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் கேரளா திரும்பினர். அவர்களை சுகாதார துறையினர் சோதித்த போது, 2 வியாபாரிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரள சுகாதார துறை மந்திரி ஷைலஜா இதனை தெரிவித்தார். அவர் கூறும்போது, கேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டுமே கொரோனா நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் இருவர் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள். மற்றொருவர் இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர் என தெரிவித்தார்.

இது போல எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் அனுமதி சீட்டு பெற்று சென்னையில் இருந்து கேரளா வந்தனர். அவர்களின் 5 வயது மகனுக்கும் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்