![](admin/uploads/.5fb9f49a493b32.18986947.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் இன்று(மே 11) புதிதாக 538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 4,371 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆகவும், பலி எண்ணிக்கை 53 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத அளவில், 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 4 பேர் பலியாகி உள்ளனர். இதில் இருவர் பெண்கள். இதனையடுத்து மொத்த பாதிப்பு 4,371 ஆகவும், பலி 32 ஆகவும் உயர்ந்தது. இதுவரை 706 பேர் சிகிச்சைக்குப்பின் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 97, செங்கல்பட்டில் 90, அரியலூரில் 33, திருவண்ணாமலையில் 10, காஞ்சியில் 8, மதுரையில் 4 பேருக்கு இன்று மட்டும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.