![](admin/uploads/.5eb91123020c98.31418397.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவி வரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சூரி உதவியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக நன்றி தெரிவித்த உதயநிதியை நடிகர் சூரி பாராட்டி புகழ்ந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுக்க மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஒன்றரை மாதமாக ஊரடங்கு இருப்பதால் மக்கள் அடிப்படை பொருட்களுக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுக்க கஷ்டப்படும் மக்களுக்கு தி.மு.க.வினர் தீவிரமாக உதவி செய்து வருகிறார்கள். இதற்காக தி.மு.க.வின் படை தமிழகம் முழுக்க களமிறக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தி.மு.க.வின் இளைஞரணி தீவிரமாக உதவி செய்து வருகிறது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு தி.மு.க.வினர் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதிக்கு நடிகர் சூரியும் இந்த செயல்பாட்டில் உதவி இருக்கிறார். அதாவது மக்களுக்கு உதவி செய்து வரும் உதயநிதியின் செயல்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் சூரியும் பொருட்கள் மற்றும் நிதி கொடுத்து உதவி இருக்கிறார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘என் பெயரிலான ரசிகர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் 7,500 குடும்பங்களுக்கு வழங்கக்கோரி அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை மன்ற செயலாளர் பாபு, துணை செயலாளர் கலீம், ராஜ்குமார் முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் பகிர்ந்தளித்தேன். தாமாக முன்வந்து உதவிய அண்ணன் சூரி அவர்களுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியின் இந்த டிவிட் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரல் ஆனது. இதற்கு நடிகர் சூரி பதில் அளித்துள்ளார். அதில், ‘பிரதர் இவ்வளவு குடும்பங்களுக்கு உதவி செய்த உங்க நல்ல மனசுக்கும் உங்கள் ரசிகர் மன்றத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. பிரதர் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். சூரியின் இந்த டிவிட்டும் பெரிய அளவில் டிரெண்டாகி உள்ளது.