Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74,281 ஆக உயர்வு: 2,415 பேர் பலி

மே 13, 2020 05:43

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 13) காலை 9.00 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்தை கடந்தது. 74,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 லிருந்து 74,281 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,293 லிருந்து 2,415 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,386 ஆக அதிகரித்துள்ளது. 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 24,427 - 921
குஜராத் - 8,903 - 537
தமிழகம் - 8,718 - 61
டில்லி - 7,639 - 86
ராஜஸ்தான் - 4,126 - 117
மத்திய பிரதேசம் - 3,986 - 225
உத்தர பிரதேசம் - 3,664 - 82
மேற்கு வங்கம் -2,173 - 198
ஆந்திரா - 2,090 - 46
பஞ்சாப் - 1,914 - 32
தெலுங்கானா - 1,326 - 32
காஷ்மீர் - 934 - 10
கர்நாடகா - 925 - 31
பீஹார் - 831 - 06
ஹரியானா - 780 - 11
கேரளா -524 04
ஒடிசா - 437- 03
சண்டிகர் - 187 - 03
ஜார்க்கண்ட் - 172 - 03
திரிபுரா- 154 - 0
உத்தரகாண்ட் - 69 - 1
அசாம் - 65 - 02
ஹிமாச்சல பிரதேசம் - 65 - 02
சத்தீஸ்கர் - 59 - 0
லடாக் - 42 - 0
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 - 0
கோவா- 07 - 0
மணிப்பூர் - 02 - 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

தலைப்புச்செய்திகள்