Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் ரூ.95 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

மே 13, 2020 10:12

சென்னை: சென்னை, பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள மருத்துவ பழகுனர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில், 10-வது முடித்து பி.எஸ்சி. நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை.

மொத்த காலிப்பணியிடங்கள்: 14.

பணி: மருத்துவ பழகுனர்.

வயது வரம்பு: மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: M.B.B.S. (Bachelor Of Medicine/Bachelor Of Surgery), M.D. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஊதியம்: ரூ.75,000 முதல் ரூ.95,000 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://icf.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : மொபைல் மற்றும் தொலைபேசியில் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.icf.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

தலைப்புச்செய்திகள்