![](admin/uploads/.603f776362fe77.66256072.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர்,அமிர்தராஜ நல்லூர்,ஏகரிமங்கலம்,சீராதோப்பு,சாத்தனூர்,எட்டுமாத்திடல் ஆகிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி நேரில் சென்று கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனது சொந்த செலவில் 1,500 குடும்பங்களுக்குத் அரிசி தொகுப்பு பையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பொருளாளர் வீரமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் குணா, மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஷ், ஊராட்சி செயலாளர்கள் ஸ்ரீதர், ஜெயவேல் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
---------