Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கொச்சி: வந்தே பாரத் மிஷனில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து 152 பேர் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.
ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து 3 குழந்தைகள், 31 மருத்துவ உதவி தேவைப்படுவோர் உள்ளிட்ட 152 பேர், ஏர் இந்தியா விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சின் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.