Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமல் கட்சி வேட்பாளர்கள் கோவையில் 24-ந்தேதி அறிமுகம்

மார்ச் 14, 2019 06:32

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக மூன்றாவது நாளாக நேர்காணல் நடந்தது. 

இரவும், பகலுமாக நடக்கும் வேட்பாளர் தேர்வில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு நேர்காணல் நடக்க இருக்கிறது. 
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிமுக விழா, கோவையில் வரும், 24-ந்தேதி நடக்க இருக்கிறது. இது குறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவை கொடிசியா வளாகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணி அளவில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது. தமிழர்களின் ஒலியாய் தமிழகத்தின் ஒளியாய் வருங்காலத்தின் வழியாய் நமக்கான ஆட்சி அமைய உங்கள் வேட்பாளர்களின் அறிமுக விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்