Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று

மே 16, 2020 01:04

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்து 108 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 599 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்