Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று

மே 16, 2020 02:42

சென்னை: சென்னையில் இன்று (மே 16) ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு நாளும் மாநிலத்திலேயே அதிக பாதிப்பை பதிவு செய்து வருகிறது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,271 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடில் கடந்த 31 நாட்களாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதேபோல், திருப்பூரில் 15 நாள், கோவையில் 13 நாள், சேலம் மற்றும் திருவாரூரில் 10 நாள், நாமக்கல் மற்றும் நீலகிரியில் 7 நாள், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் 6 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை.

தலைப்புச்செய்திகள்