Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு

மே 17, 2020 06:53

அமிர்தசரஸ்: நான்காம் கட்ட ஊரடங்கு, நாடு முழுதும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், பஞ்சாபில், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், நேற்று இரவு கூறியதாவது: மாநிலத்தில் ஊரடங்கு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நாளை முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படும். பொது போக்குவரத்தை குறைந்த அளவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் தொழில்கள் துவக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்