![](admin/uploads/.5e414c2b672733.52632709.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அமிர்தசரஸ்: நான்காம் கட்ட ஊரடங்கு, நாடு முழுதும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், பஞ்சாபில், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், நேற்று இரவு கூறியதாவது: மாநிலத்தில் ஊரடங்கு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நாளை முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படும். பொது போக்குவரத்தை குறைந்த அளவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் தொழில்கள் துவக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.