Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி சேனல்கள் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மே 17, 2020 08:42

புதுடெல்லி: தன்னிறைவு இந்தியா திட்டத்தில் கடைசி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

*கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.4113 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்நாட்டில்தயாரிக்கப்படுகின்றன.

*நாடு முழுவதும் பரிசோதனை மையம் அமைகக 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*சுகாதார பணியாளர்களுக்கு 87 லட்சம் என்95 மாஸ்க்குகள், 11 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 51 லட்சம் பிபிஇ கிட்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

*கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

*மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது

*உடல்கவசம் தயாரிக்க 3000 நிறுவனங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன.

*சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிக்கப்படும்.

*அனைத்து மாவட்டங்களிலும தொற்றுநோய் தொடர்பான ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

*அனைத்து மருத்துவமனைகளிலும் தொற்று நோய் பிரிவு அமைக்கப்படும்

*ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது

*பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும்.

*இ பாடசாலை திட்டத்தில் மேலும் 200 பாடப்புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

*ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி சேனல்கள் உருவாக்கப்படும்.

*பள்ளிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன

*கல்வி சார்ந்த வீடியோ ஒளிபரப்ப 2 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

*கொரோனா பாதிப்பு குறைந்த உடன் தொழில்நுட்ப உதவியுடன் கல்வித்துறையை வலுப்படுத்த பிரதமர் இவித்யா திட்டம்

*இ வித்யா தீஷா திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்

*டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கற்பித்தல் திட்டம்

*100க்கும் மேற்பட்ட பல்கலைகளில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி மே மாதத்திற்குள் ஏற்படுத்தப்படும்

*பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கும் இணையவழி கல்வி திட்டம்

*மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு பிரத்யேக மின்னணு பாட வகைகள் அமைக்கப்படும்

*கல்விக்கு கம்யூனிட்டி ரேடியோ அதிகளவில்பயன்படுத்தப்படும்

*மனோதர்பன்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும்.

*தொடக்க கல்வியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு புதிய திறன் மேம்பாடு வரைவு திட்டங்கள் வகுக்கப்படும்.

*திவால் சட்டத்தின் கீழ் 44 சதவீத கடன் திருப்பி வசூலிக்கப்பட்டுள்ளது.

*100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மேலும் 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*ஏற்கனவே 61,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது

*இதன் மூலம் மொத்தம் 300 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்க வழிவகை செய்யப்படும்

*சுகாதார துறையில் பொது செலவின தொகை அதிகரிக்கப்படும்.

*சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது உதவும்

*ஊரக நகர பகுதிகளில் சுகாதார நல மையங்கள் மேம்படுத்தப்படும்.

*எதிர்கால சுகாதார சவால்களை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராகிவருகிறது.

*தொழில் துவங்கும் முறைகள் மேலும் எளிமையாக்கப்படும்.

*திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படும். இதனால், சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும்

*கம்பெனி சட்டத்தில் உள்ள சில கிரிமினல் குற்றப்பிரிவுகளை தளர்த்த நடவடிக்கை

*திவால் சட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் நடத்துவோருக்கு தனி தீர்ப்பாயம் அமைக்கப்படும்

*சிறு குறு தொழில் நடத்துவோர் பாதிக்கப்படாத வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும்

*கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் கொண்டு வரப்படும்.

*சிறு நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்களின் வாராக்கடன்களுக்கு குறைந்தபட்ச அபராதம் வசூலிக்கப்படும்

*திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்பதற்கு புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்.

*வங்கி கடனை செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி காலக்கெடுவை நீட்டித்து கொள்ளலாம்.

*சில பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்த்து மற்ற நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும்

* தனியார் பங்களிப்பு இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடு தொடரும்

* அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் போட்டி போடலாம்.

* தனியார் முதலீட்டிற்கு அனுமதியில்லாத நிறுவனங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

*ஒரே துறையில் 4க்கும் மேற்பட்ட பொதுத்துறைநிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும்.

* கொரோனா காரணமாக மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.46,038 கோடி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

* இக்கட்டான சூழ்நிலையில், மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

*வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறோம்.

* வருவாய் பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு ரூ.12,390 கோடி வழங்கப்பட்டுள்ளது.

*பேரிடர் மீட்பு நிதியில் ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

*தன்னிறைவு இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஒத்திசைவான திட்டங்கள் தேவைப்படுகின்றன.

*மாநில அரசுகளின் கடன் வாங்கும் வரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பு.

* மாநில அரசுகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பில் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். 86 சதவீதத்தை பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்