Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இன்று ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா தொற்று

மே 17, 2020 03:04

சென்னை: சென்னையில் இன்று (மே 17) ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், சென்னையே தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேரில் சென்னையில் மட்டும் 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 480 பேரும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த தலா ஒருவரும் அடங்கும். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,750 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 28 பேர், திருவள்ளூரில் 18 பேர், மதுரையில் 13 பேர் (இதில் மஹா.,வில் இருந்து வந்தவர்கள் 2 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும்) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 663 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 9,749 பேர், 60 வயதை கடந்தவர்கள் 812 பேர் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்