Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 19) காலை 9:30 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1,01,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,163 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 4,970 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,169 லிருந்து 1,01,139 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,029 லிருந்து 3,163 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36,824 லிருந்து 39,173 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,970 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, 134 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.