![](admin/uploads/.602141b05a0dc1.85897069.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆனைமலை: பொள்ளாச்சி ஆனைமலை அருகே மது பிரிக்கும் தகராறில் மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). இவரது மனைவி பழனாள் (57). மாணிக்கம், பழனாள் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று மாணிக்கம் டாஸ்மாக் கடையில் இருந்து 6 மதுபாட்டில்களை வாங்கி வந்தார். கணவன்- மனைவி இருவரும் மது குடித்தனர். அப்போது 4 மதுபாட்டிகள் தனக்கும், 2 மதுபாட்டில் உனக்கும் என்று மாணிக்கம் கூறினார். இதனை பழனாள் ஏற்கவில்லை. தனக்கும் 3 பாட்டில்கள் வேண்டும் என்றார். மதுபாட்டில்களை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் கட்டையை எடுத்து தாக்கியதோடு பழனாளின் தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த பழனாள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.