![](admin/uploads/.5fdaf3b1e67918.67223265.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை, மே.20: பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது: பட்டம் விடுவதால் ஏற்படும் பிரச்னைகள், மின்வாரியத்துக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. ரோட்டில் செல்வோர் மீது, பட்டத்தின் கயிறு இறுக்கி, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவெ உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் இது குறித்து கண்காணிக்க வேண்டும். அதையும் மீறி பட்டம் விட்டால், அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.