Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் புதன்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஓட்டுனர்கள் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் வாகனத்திற்கான மாதத் தவணையில் இருந்து விலக்கு அளித்ததைப் போல ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் விலக்கு அளிக்க வேண்டும், ஆர்டிஓ சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்கவும் 3 மாதம் அவகாசம் வேண்டும் என வலியிறுத்தி சிறகுகள் ஓட்டுநர் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டென்னிஸ் எட்வின் தலைமை வகித்தார். 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிய நேரம் பரபரப்பு ஏற்பட்டது.