![](admin/uploads/.5fa78c062e72a3.44113642.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வேலூர்: வேலூர் அருகே திருமணமாகி குழந்தை பெற்ற இளம்பெண் கணவர் பிரிந்ததால் வேறொரு வாலிரை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்து ஏற்பட்ட தகராறில் குழந்தையை கணவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியை பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா. இவருக்கு 20 வயதாகிறது. ஜோலார்பேட்டையை சேர்ந்த சிவசக்திவேல் (வயது 21) என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் கலைரஞ்சனி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், லாவண்யாவை சிவசக்திவேலுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தார். அந்த பெண்ணுடன் தனியாக குடும்பமும் நடத்தி வருகிறார். இதை பார்த்ததும் லாவண்யாவுக்கு கோபம் அதிகமாக குழந்தையை தூக்கிக் கொண்டு கே.வி.குப்பத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு இடத்தில் கட்டிட வேலைக்கும் போனார். அந்த இடத்தில் பிரவீன்குமார் (வயது 21) பழக்கமானார். பிரவீன்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் லாவண்யாவும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி பழகி வந்துள்ளார்.
இதை நம்பிய பிரவீன்குமார், லாவண்யாவை ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். அந்த குழந்தை யாருடையது என்றுகூட கேட்காமல் பிரவீன்குமார் அந்த வீட்டிலேயே குடும்பமும் நடத்த ஆரம்பித்தார். இந்நிலையில், கடந்த 17ம்தேதி இரவு குழந்தை கலைரஞ்சனி திடீரென இறந்துவிட்டாள். இது சம்பந்தமாக போலீசாருக்கு புகார் சென்றதும், விசாரணையும் துவங்கியது.
லாவண்யா, அவரை தொடர்ந்து பிரவீன்குமார், அவரது தந்தை வெங்கடேசன், உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. கடந்த 17ம் தேதி இரவு 8.30 மணிக்கு பிரவீன்குமாரும், அவரது அப்பாவும் குடிபோதையில் வீட்டில் இருந்துள்ளனர். பிரவீன்குமார் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தபோது, வெங்கடேசன் இது யார் குழந்தை என்று துருவி, துருவி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார், கலைரஞ்சனியிடம் இது யார் குழந்தை? என்று அதே கேள்வியை கேட்டார். அப்போதுதான் லாவண்யா முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என தெரியவந்தது.
இதை கேட்டு பிரவீன் குமாருக்கும் அவரது அப்பாவுக்கும் தலையே சுற்றிவிட்டது. இவ்வளவு நாள் காதலித்து ஏமாற்றியதும் இல்லாமல், கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை இருப்பதையே மறைத்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில், பிரவீன்குமார், லாவண்யாவிடம் இருந்த குழந்தையை பிடுங்கி தரையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து அங்கேயே இறந்துவிட்டது. இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பிரவீன் குமார் கைதான நிலையில் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.