Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம்பெயர் தொழிலாளர்களை கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு: நிடி ஆயோக் சி.இ.ஓ

மே 23, 2020 06:12

புதுடெல்லி: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என நிடி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் கூறினார்.

இது குறித்து நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொடுமையாக மாறியுள்ளது. இவர்கள் விஷயத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உருவாக்கிய சட்டங்களினால் பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் உருவாகினர். தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு. இந்த சவாலில் நாம் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளரையும் நன்றாக வைத்திருப்பதில் மாநில, மாவட்ட மட்டத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்