Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

மே 24, 2020 06:38

சென்னை: சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், சென்னை கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை, இயக்க அனுமதிக்க வேண்டும், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கை அடிப்படையில், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள்) 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்கக்கூடாது.

நிபந்தனைகள்

* தொழிலாளர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்
* பணியாளர்கள் அனைவரும் மாஸ்க், கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
* சமூக இடைவெளி கடைபிடித்து தொழிலாளர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
* தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டு்ம
* 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்
* தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.
* சோப்பு மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* இது தவிர, பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்