Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு

மார்ச் 14, 2019 12:00

சென்னை:பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் த.மா.கா.வின் நிலைப்பாடு. 

பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணி வெற்றி கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ் - தி.மு.க. ஆகியவை ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள். 

தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட, எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.  

கேட்ட தொகுதியை அ.தி.மு.க. கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்