Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரம்ஜான் பண்டிகை: முஸ்லிம்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மே 25, 2020 06:24

புதுடெல்லி: ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (மே 25) ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: ரமலான் திருநாள் அன்பு சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுங்கள் எனக்கூறியுள்ளார்.

பிரதமர் மோடி,டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‛ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வாழ்த்துகள்,' எனப் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்