Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரம்ஜான் பண்டிகை; உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம்: டாக்டர். சு.ராஜா வாழ்த்து

மே 25, 2020 06:38

சென்னை, மே.25: உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட, ஈகை திருநாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம் என அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து டாக்டர் சு.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனைத் தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் கொள்ளாமை போன்ற நற்குணங்களை நாம் அனைவரும் கடைப்பிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட, ஈகை திருநாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்போம்.

அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என டாக்டர் சு.ராஜா அறிக்கையில் கூறியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்