![](admin/uploads/.62ea1ec2aee277.17367989.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: லோக்சபா தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 258 நிபுணர்களை சந்தித்து பேசி உள்ளார் பிரதமர் மோடி. இவர்கள் அனைவருமே விளம்பரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள். வரும் தேர்தலுக்குரிய சுலோகன், 30 அல்லது 40 நொடிகளுக்குள் வீடியோ, மோடி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்ட விபரங்கள் போன்றவற்றை இவர்கள் தயாரிக்கின்றனர்.
பா.ஜ., தலைவர்களுடனும் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்டர்நெட்டில் தனி பிளாக் துவங்கி, அதில் வாரம் ஒரு முறை எழுதவும் மோடி எண்ணி உள்ளார். ஏப்ரல் முதல் வாரம் முதல் கட்சி தொண்டர்களுடன் மோடி ஆப் மூலமும் கலந்துரையாட மோடி திட்டமிட்டுள்ளார்.தினமும் காலை 8 முதல் 8.30 மணி வரை அவர் கலந்துரையாடலாம் என தெரிகிறது. அப்புறம் தினமும் பயணம், ஒரு நாளைக்கு 2 பொதுக்கூட்டம் அன்றே டில்லிக்கு திரும்புவது என்று மோடி திட்டமிட்டு வருகிறார்.