Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய மின் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மே 26, 2020 11:01

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பா.ஜ.க. மோடி அரசின் தேசிய மின் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி அறிவுறுத்தலின்படி மத்திய அரசு அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள், ஏழை குடிசை வாழ் மக்கள், ஏழை நெசவாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்  மின்சாரத்தை நிறுத்த நினைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் தெப்பக்குளம் தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் மின்நிலையம் மற்றும் தபால் நிலையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம், திருவனைக்கோயில் இந்தியன் வங்கி, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம்,  தபால் நிலையம், ஜங்ஷன் தபால் நிலையம், திருச்சி வானொலி நிலையம், தபால் நிலையம் பாலக்கரை, தபால் நிலையம் பொன்மலை, எடமலைப்பட்டிபுதூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம், மன்னார்புரம் ஈ.பி. அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகம் முன்பாக முன்னணி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் கோட்டத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜா, நசீர் அரவனூர், தொட்டியம் சரவணன், சேவா தள முரளி, கோட்டத் தலைவர்கள் ரவி, சிவாஜி சண்முகம், ராஜ் மோகன், குழந்தைவேலு, ஜோசப் ஜெரால்டு, ஆனந்தராஜ், ஓவியர் கஸ்பர்  முரளி, சக்கரபாணி,  மகேந்திரன், முருகன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்