![](admin/uploads/.62a602bdd83975.71860902.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காடுவெட்டி: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவிடம் அருகே அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் மற்றொரு தரப்பால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையடுத்து இருவரும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவுநாள் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது. காடுவெட்டியில் உள்ள குருவின் நினைவிடத்துக்கு மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது கனல், மனோஜூக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கனலரசன், மனோஜ் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காடுவெட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலதுகரமாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும், வன்னியர் சங்கத்தில் அசைக்க முடியாதவராக காடுவெட்டி குரு இருந்தார். பா.ம.க. அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.