Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் பல இடங்களில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அதிர்ச்சி

மே 28, 2020 07:34

திருப்பூர்: திருப்பூரில் இன்று காலை வெடி வெடித்தது போன்ற பல சத்தம் பல இடங்களில் கேட்டது. இது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், பல்லடம், அருள்புரம், மங்களம், அவினாசிபாளையம், பொங்கலூர், கொடுவாய், அனுப்பர்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(மே 28) காலை 10: 30 மணியளவில் வெடிவெடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர். சத்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் வானிலை மைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு "நிலநடுக்கம் போன்ற எந்த அதிர்வுகளும் பதிவாகவில்லை. வெடி சத்தத்திற்கு காரணம் வேறு ஏதாவது இருக்கலாம்" என்றனர்.

தலைப்புச்செய்திகள்