Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ விடுப்பில் சென்றார் விமானப்படை வீரர் அபிநந்தன்

மார்ச் 15, 2019 05:38

துடில்லி: விமானப் படை வீரர் அபிநந்தனிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவருக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாக்.கின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பிப். 27ல் பாக். விமானத்தை போர் விமானத்தில் துரத்திச் சென்ற இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாக். ராணுவத்திடம் சிக்கினர். மூன்று நாட்களுக்கு பின் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

பாக். ராணுவத்தினர் அவரை நடத்திய விதம் குறித்தும் அங்கு நடந்தவை குறித்தும் விமானப் படை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாக். ராணுவம் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாக அபிநந்தன் தெரிவித்தார். அவரிடம் விபரங்கள் கேட்டறிவதை அதிகாரிகள் நேற்றுடன்( மார்ச் 14) முடித்தனர். இதையடுத்து அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. 

'சில வாரங்களுக்கு பின் அபிநந்தனின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டதும் அவர் எப்போது பணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படும்' என விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


 

தலைப்புச்செய்திகள்