Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடல்நலக்குறைவால் பா.ஜ., எம்.பி. பிரக்யா சிங் மருத்துவமனையில் அனுமதி

மே 30, 2020 09:59

புதுடெல்லி: பாஜக எம்பி பிரக்யா சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர். மாநிலத்தில் கொரோனா பரவி வரும் நெருக்கடியான சூழ்நிலையில், பிரக்யா சிங் தாக்கூர் எம்பியை காணவில்லை என மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பல்வேறு பகுதிகளில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

 பைராகர் சிசிலி பகுதியில் நடமாடும் மருத்துவமனை சேவையை வீடியோ கால் மூலம் துவக்கி வைத்தபோதும், அவரை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பிரக்யா சிங் காணாமல் போகவில்லை என்றும், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகி உமாகாந்த் தீட்சித் கூறி உள்ளார்.

எம்பி பிரக்யா சிங் ஊரில் இல்லாதபோதும், கட்சியினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருவதாகவும் உமாகாந்த் கூறினார்.

பிரக்யா சிங் புற்றுநோய் மற்றும் கண் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில செய்தித் தொடர்பாளர் ராகுலி கோத்தாரி கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்