Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று: 230 பேர் பலி

ஜுன் 01, 2020 07:11

புதுடெல்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 230 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,394 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 1) காலை 09:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,394 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,818 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 93,322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். 1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்