![](admin/uploads/.60b0844f351687.97258688.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் உள்ள முதல்வர் இ.பி.எஸ்., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், சென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து முதல்வர் வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், விசாரணையில், மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.