Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு பீஹார் அரசு சார்பில் இலவச ஆணுறை

ஜுன் 03, 2020 06:31

பாட்னா: பீஹாரில், மருத்துவ முகாம்களில், 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு, வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, அம்மாநில அரசு, இலவச ஆணுறைகளை வினியோகித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த, 28 முதல், 29 லட்சம் வரையிலான தொழிலாளர்கள், சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் மூலம், சமீபத்தில், சொந்த மாநிலமான, பீஹார் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, தனிமை மருத்துவ முகாம்களில், 14 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின், வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதுவரை, 8.77 லட்சம் தொழிலாளர்கள், தனிமை முகாம்களில் இருந்து, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும், 5.30 லட்சம் தொழிலாளர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீடு திரும்பும் தொழிலாளர்களால், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை, பீஹார் அரசு துவக்கி உள்ளது. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தலா இரண்டு, 'பாக்கெட்' ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் வீடுகளில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும், சுகாதாரப் பணியாளர்களும், இலவச ஆணுறைகளை விநியோகித்து வருகின்றனர். 'தனிமை மருத்துவ முகாம்கள் செயல்படும் வரை, இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்' என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்