Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

ஜுன் 03, 2020 08:57

புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 217 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 3) காலை 11:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,815 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,01,497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 72,300 - 2,465
தமிழகம் - 24,586 - 197
டில்லி - 22,132 - 556
குஜராத் - 17,617 - 1,092
ராஜஸ்தான் - 9,373 - 203
மத்திய பிரதேசம் - 8,420 - 364
உத்தர பிரதேசம் - 8,361 - 222
மேற்கு வங்கம்- 6,168 - 335
ஆந்திரா - 3,898 - 64
கர்நாடகா- 3,796 - 52
தெலுங்கானா - 2,891 - 92
கேரளா - 1,412 - 11
புதுச்சேரி- 82 - 0

தலைப்புச்செய்திகள்