Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.36 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 294 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 80,229 2,849
தமிழகம் - 28,694 -232
டெல்லி - 26,334-708
குஜராத் - 19,094 -1,190
ராஜஸ்தான் - 10,084 - 218
உத்தர பிரதேசம் - 9,733 - 257
மத்திய பிரதேசம் - 8,996 - 384
மேற்கு வங்கம் - 7,303-366
கர்நாடகா- 4,835 - 57
பீஹார் - 4.596 -29
ஆந்திரா - 4,303 - 73
ஹரியானா - 3,597 - 24
காஷ்மீர் - 3,324 -36
தெலுங்கானா - 3,290 - 113
ஒடிசா- 2,608-08
பஞ்சாப்- 2,461-48
அசாம் - 2,153 -04
கேரளா - 1,699 - 14
உத்தரகாண்ட் - 1,215-11
ஜார்க்கண்ட்-881 -07
சத்தீஸ்கர்-879 -02
திரிபுரா-692-0
ஹிமாச்சல பிரதேசம் -393 - 05
சண்டிகர் -304-05
கோவா-196-0
மணிப்பூர்-132-0
புதுச்சேரி- 99 - 0
லடாக்-97-01
நாகலாந்து-94-0
அருணாச்சல பிரதேசம்-45-0
அந்தமான-33-0
மேகாலயா-33-1
மிசோரம்-22-0
தாதர் மற்றும் நாகர் ஹவேலி-14-0
சிக்கிம்-03-0