Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.4 லட்சமாக உயர்வு; 6,929 பேர் பலி

ஜுன் 07, 2020 06:52

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.46 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆகவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 293 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 929ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5வது இடத்தில் இந்தியா

இந்நிலையில், அமெரிக்காவின் ஜான் ஹோப்கின்ஸ் பல்கலையின் தரவுகளின்படி, உலகளவில் கொரோனா பாதிப்பில், அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில், இந்தியா, 5வது இடத்திற்கு முன்னேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 2.46 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பல்கலை தரவுகளின்படி ஸ்பெயின் நாட்டில் 2.41 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில்உள்ளது. இதற்கு அடுத்து பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் நாடுகள் உள்ளன.

தலைப்புச்செய்திகள்