Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெட்டுக்கிளிகளை ஒழிக்க, ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு

ஜுன் 08, 2020 07:28

புதுடெல்லி: வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் ராஜஸ்தான், ம.பி., மஹாராஷ்டிரா .உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர பரப்பில் பயிர்களை தின்று அழித்துள்ளன.

இதையடுத்து டிரோன், ஹெ லிகாப்டர்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிக திறனுள்ள தெளிப்பான்களை மத்திய வேளாண்மை அமைச்சகம் இறக்குமதி செய்துள்ளது. இவற்றை விமானப்படையின் எம்ஐ 17 ரகத்தைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களில் பொருத்தி பூச்சிக் கொல்லி மருந்தினை தெளிக்கும் பணி நடைபெற உள்ளது. இதே போல் 5 டிரோன் நிறுவனங்களும் பூச்சிக் கொல்லி தெளிக்கும் பணியினை அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்