![](admin/uploads/.5ee5e329839742.83063251.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரையில் முதியவர் ஒருவர், பிச்சை எடுத்து, 3வது முறையாக, ரூ.10 ஆயிரம் பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டரிடம் வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணறு பூல்பாண்டியன். மும்பையில் பிச்சை எடுத்த இவரை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். அதில் கிடைக்கும் பணத்தில் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்கி தருகிறார். புயல் நிவாரணத்திற்கும் வழங்கியிருக்கிறார்.
மார்ச்சில் மதுரை வந்தவர் ஊரடங்கால் சமுதாய கூடத்தில் தங்கி பிச்சை எடுத்தார். அதில் கிடைத்த பணத்தில் இருமுறை கொரோனா நிவாரண நிதிக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார். நேற்று 3வது முறையாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் வினய்யிடம் வழங்கினார்.