Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்மலா சீதாராமன் உரை: தமிழகத்தில் 10 லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு

ஜுன் 15, 2020 07:03

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சை, 10 லட்சம் பேர் பார்க்க, தமிழக பா.ஜ., நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தலைமையில், 'மோடி சர்க்கார் இரண்டின், ஓராண்டு சாதனைகள்' என்ற தலைப்பில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும், 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே உரையாற்றுகிறார்.
மத்திய அரசு ஓராண்டில் செய்துள்ள சாதனைகள், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதியுவிதவி, பல்வேறு திட்டங்கள் குறித்து, விளக்க உள்ளார். அவரது பேச்சை, 'கானொளி பேரணி' என்ற பெயரில், சமூக வலைதளங்கள் வழியே, 10 லட்சம் பேர் பார்க்க, நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர், பிரசாத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்